February 2018


போட்டியின் விதிமுறைகளுக்கமைய சரியான விடையை எழுதிய போட்டியாளர்கள்:

1
Nusra Abdeen
Mangedara, Thulhiriya.

2
Nusrath Nassar
Mie alla, Mathara.

3
Fathima Rizwana
Ilangawatha, Gampola.

4
Mohamed Lafeer
Selambridge, Nawalapitiya.

5
Fathima Salha
Pipe line Road, Oyapahala, Matale

6
Fathima Dheema
Galle Road, Katukurunda, Kalutara.

7
M.I.Fatima
Baduwatta, Ehaliyagoda.

8
Safiyya Afham
Wajirajana Mawatha, Wligama

9
Asisha Ameen
Wajirajana Mawatha, Wligama

10
Fathima Fasmina
Mapakanda, Nawalapitiya.

11
Irfana Zameer
Santhasiriwatta, Keerapanna, Gampola

12
Fathima Nasriya
Selam Bridge, Nawalapitiya

13
Haseena binth Hussain
Hijragama, Hemmathagama.

14
Rismiya
---

15
Nusra
---

16
Ruzna Mohideen
New street, Weligama.

17
Mohamed Arshad
Selam Bridge, Nawalapitiya.

18
A.F.Sirafa
Malyadi Giramam 03, Sammanthurai.

19
Ummu Iman
Kangeyan Adi





20
Fathima Fawmiya
Riyad

21
M.Jahangir Ali
Single Camp, Satco, Riyad



























குழுக்கள் முறையில் வெற்றியீட்டியவர்கள்:
  • Ruzna Mohideen.
  • M. Jahangir Ali
இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது ALIMAMSLSF இன் சார்பாக  நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மீண்டும் அடுத்த வார வினாவுடன் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்.
தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.


வழிகெட்ட அல்லது வழி தவறிய சிந்தனையுடையவர்கள் இக்கலிமாவுக்குத் தரும் பொருள்.

தவறான பொருள் 1:
'' உண்டாகியிருக்கும் அனைத்தும் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை''.
(لا وجود إلا الله)
இப்பொருளுக்கும், நபிமார்கள் அனுப்பப்பட்ட நோக்கத்திற்கும் எவ்வித தொடர்பையும் காணமுடியாத, ஒட்டு மொத்த வழிகேட்டையும் உள்ளடக்கிய கொள்கைகொண்ட பொருள் இதுவாகும். இக்கொள்கையுடையவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களாகக் கணிக்கப்படுவர். ஏனெனில், இஸ்லாத்தில் இல்லாத, புராணங்களை வழிபாடாகக் கொண்டது மட்டுமின்றி, மொத்தத்தில் இந்து கலாசாரமான அத்வைதக் கொள்கையாகவே இது காணப்படுகிறது.
(இக்கொள்கையை விட்டும் அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக!) 

 இஸ்லாம் என்பது, நபி (ஸல்) அவர்கள் போதித்தவைகளே. அவர்களின் வாழ்கையில், ''உண்டாகியிருக்கும் அனைத்தும் அல்லாஹ்வேயன்றி வேறில்லை'' என்பதை உணர்த்தும் எந்த செயலும் அறியப்படவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் எந்த சமூகத்திலிருந்து தூதராக அனுப்பப்பட்டார்களோ, அச்சமூகத்தினர் கூட, இந்த முஹம்மத், ((ஸல்)), ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை"" என்றல்லவா சொல்கிறார் என உணர்ந்திருந்தார்கள்.
உதாரணமாக:
 நபி (ஸல்) அவர்களது பிரச்சாரமெல்லாம் ''லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்று தான் இருந்தது. அவ்வேளை குறைஷிகளால் பின்வருமாறு சொல்லப்படுகிறது.

أَجَعَلَ الْآلِهَةَ إِلَٰهًا وَاحِدًا ۖ إِنَّ هَٰذَا لَشَيْءٌ عُجَابٌ
''இவர், (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்). (ஸாத்:5)

 "உண்டாகியிருக்கும் அனைத்துமே அல்லாஹ்வன்றி வேறில்லை" எனும் பொருள்பட நபியவர்கள் இக்கலிமாவைக் போதித்திருந்தால், அச்சமுதாயத்திலிருந்து எவரும், இந்நபியவர்களை எதிர்த்திருக்க வாய்ப்பிருந்திருக்காது, இன்னும், தான் அதிகம் நேசிக்கும் ஊரான மக்கா நகரைவிட்டும் நபியவர்கள் வெளியேறியும் இருக்கமாட்டார்கள். அது தவிர, ''உனக்கு நாசம் உண்டாகட்டும்'' என்று நபியவர்களைப் பார்த்து மண்ணை அள்ளி வீசிய அபூ லஹபும் கூட அவ்வாறான ஒரு பாதகமான செயலைச் செய்திருக்கமாட்டான்.
எனவே, ''லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு மேற்படி பொருள் கொடுப்பது உறுதியான வழிகேடு, இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் மிகப் பெரும் பாவகரமான செயல் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அல்லாஹ் கூறுகிறான்:
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவனைப் போன்று எதுவுமில்லை, அவன் கேட்பவன் பார்ப்பவன். (42:11)

தவறான பொருள் 2:
சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர வேறு எவருக்குமில்லை.

(لا حاكمية إلا لله , لا حكم إلا لله , لا حاكم إلا الله)
 வெற்றி, தோல்வி என அல்லாஹ் தீர்ப்புக் கொடுப்பதற்கு முன், சமாதானத்திற்கு வருவது அல்லாஹ்வின் தீர்ப்பல்ல எனக்கூறி, தீர்ப்பு வழங்கும் (சட்டமியற்றும்) அதிகாரம் அல்லாஹ்வுக்கேயன்றி வேறவருக்குமில்லை என முதலில் கூறியவர்கள் கவாரிஜ்களாகும். ஆனால் இன்று ஓர் இயக்கித்தினர் இதனை ஷஹாதாக் கலிமாவின் பொருளாகவே அர்த்தம் கொடுக்கின்றனர். என்றாலும், நமது நாட்டைப் பொறுத்தவரை, மக்களிடமிருந்து தங்களது கொள்கையைப் பாதுகாப்பதற்காக, "சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறவருக்குமில்லை'' என்பதோடு, நாம் சிறு வயது முதல் அறிந்திருந்த ''வணக்கத்துக்குரியவன்'' என்பதையும் சேர்த்து ''வணக்கத்திற்குரியவன், சட்டமியற்றும் அதிகாரத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறவருமில்லை'' எனப் பொருள் கூறுவர். இது, மக்கள் விரண்டுவிடக் கூடாது எனக் கையாளும் ஒரு தந்திரமாகும். ஆனால், அவர்களின் உண்மையான கொள்கையும், கலிமாவுக்குக் கொடுக்கும் பொருளும்: ''சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே அன்றி வேறவருக்குமில்லை'' என்பதாகும்.

அவர்களின் கொள்கைக்கு ஆதாரமாக பின்வரும் வசனங்களைக் கூறுவர்:
إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ ۚ
அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. (யூஸுஃப்: 40)
وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ 
மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! (அர்ரஃது:41)

இது போன்று இன்னும் சில வசனங்களைப் பார்க்கலாம்.
என்றாலும், இவ்வனைத்து வசனங்களின் தொடர்களைக் கவனிக்கும் போது, இவைகள் ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' என்பதனுடைய பொருளுக்குரிய வசனங்களின்றி, அவைகள் அல்லாஹ்வின் செயல்களை சுட்டிக்காட்டும் வசனங்கள் என்பதை சந்தேகமின்றி அறிந்துகொள்ளலாம்.

அல்லாஹ், இம்மனித இனத்தைப் படைத்த நோக்கம், அவனை வணங்குவதற்கே அன்றி வேறில்லை.

"ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை". (51:56)

இந்நோக்கத்தை மனித சமுதாயம் நிறைவேற்றிட கற்றுக் கொடுக்கவே அல்லாஹ், அவனது தூதர்களை அனுப்பினான்.

"மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், (1) அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; (2) ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்". அல் குர்ஆன்: 16:36

தனது செயற்பாடுகள், பெயர்கள் பண்புகளைப் பார்த்து தன்னை மட்டும் வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் அடியார்களைப் படைத்திருக்கிறான்.

அல்லாஹ், அவனது செயற்பாடுகள் தொடர்பாக நபி (ஸல்) அவர்களை பார்த்து பின்வருமாறு கூறுகிறான்.

وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ ۚ
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; ''அல்லாஹ் தான்'' என்று அவர்கள் நிச்யமாகக் கூறுவார்கள். 

அல்லாஹ்வின் செயல்கள் என்பது, படைத்தல், காத்தல், அழித்தல், நிர்வாகத்தன்மை, சட்டமியற்றுதல் போன்ற அனைத்தும் அல்லாஹ்விற்குரியது என்று பொருள்படும்.

படைப்பாளந்தான், தனது படைப்புகளை எவ்வாறு நிருவகிக்க வேண்டும் என்பதை அறிவான். நிருவாகத்தன்மையில் உள்ளதுதான் சட்டமியற்றும் அதிகாரம். இதனை அறிந்தோ அறியாமலோ அன்றும் சரி இன்றும் சரி அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆக, "சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது" என இக் ''கலிமா''வுக்கு பொருள் கொடுப்பது தவறான ஒரு சிந்தனைப்போக்காகும்.

அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் எதற்காக, எதனைப் போதிக்க அனுப்பப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் தெளிவாகவே அல்குர்ஆனில் கூறுகிறான் என்பதை மேலே பார்த்தோம்.

தூதர்கள் அனுப்பப்பட்ட நோக்கம், அல்லாஹ்வை மட்டும் வணங்கி, அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ளச் செய்வதற்காகவே. மாறாக, சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறவருக்குமில்லை எனப் போதிப்பதற்காக அல்ல.
தவறான நோக்கம்:
لا قدرة لشيئ إلا لله
"அல்லாஹ்வுக்கே அன்றி வேறு எதற்கும் எவ்வித சக்தியுமில்லை"

"லாஇலாக இல்லல்லாஹ்'' எனும் இந்தக் கலிமாவுக்கு பொருள் என்று ஒன்று இருப்பது போல் நோக்கமும் உண்டு. இவைகளை விரிவாக மேலே பார்த்தோம்.

என்றாலும், ஒரு கூட்டத்தினர், ''அல்லாஹ்வுக்கே அன்றி வேறு எதற்கும் எவ்வித சக்தியுமில்லை" என்பதை ''லாஇலாஹ இல்லல்லாஹ்" எனும் கலிமாவின் நோக்கமாக கூறுகின்றனர். அதேவேளை இதற்கு பொருளொன்று உண்டு என்பதையும் மக்களுக்கு எடுத்துச்சொல்வதுமில்லை.

இவர்கள் கூறும் நோக்கம் என்பது தவறு என்பதை அறிந்துகொள்வோம்:-

1- அல்லாஹ், மனித இனத்தைப் படைத் நோக்கம்; அவ்வல்லாஹ்வை வழிப்படவேயாகும்.
2- அல்லாஹ் மட்டும் வணங்கப்பட வேன்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றவே தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்.
3- சக்தியுள்ளவன் அல்லாஹ்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம் ஏனைய வஸ்துக்களுக்கு சக்தியில்லை என்று சொல்ல முடியுமா? அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் அதற்கென்று (அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட) ஒரு சக்தியுண்டு. உதாரணமாக நெருப்பு சுடும், பனிக்கட்டி குளிரும். இதனை இயற்கை என்றும் சொல்லப்படும். சில வேளை இதற்கு மாற்றமாக இயங்கும் போது அது அல்லாஹ்வின் அற்புதம் எனப்படும்.
4- அல்லாஹ்வே சக்தியுள்ளவன் என்பதை எல்லோருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த சக்தியுள்ளவனை வழிப்பட்டு அல்லாஹ்வின் நோக்கத்தை நிறைவேற்றவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

ஆக, ஷஹாதாக் கலிமாவின் பொருளும் நோக்கமும் ஒன்றே, அது தான் இறைவன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கப்பட வேண்டும் என்பது ஆகும். இதனை விட்டும் மக்களை திசைதிருப்புவது வழிகேட்டுக்கு இட்டுச் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
முற்றும்


சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…
கேள்வி வாரம் 01 : இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டதின் நோக்கம் யாது ?
போட்டி பற்றிய முழு தகவல்களுக்கு : http://www.alimamslsf.com/2018/02/blog-post.html
விடைக்கான இணைப்புகள் :
இணைப்பு 1 (ஷிர்க் ஓர் மிகப்பெரும் இணைவைப்பு !) : http://www.alimamslsf.com/2018/02/01-sajideen-mahroof-sahvy-riyadhy.html
இணைப்பு 2 (லா இலாஹ இல்லல்லாஹ் வின் பொருளை அறிந்துகொள்வோம்... பகுதி : 01) : http://www.alimamslsf.com/2018/02/01-abul-hasan-sahwimadeni.html
இணைப்பு 3 (பகுத்தறிவு அல்லாஹ்வின் அருட்கொடை!) : http://www.alimamslsf.com/2018/02/asshaik-rizmi-junaidh-abbasi-riyadhi.html

 விடையை கீழ் வரும் இரு இலக்கங்களில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பவும்
WhatsApp No 01: Asshaik Waseem - 0094 75 25 238 25
WhatsApp No 02: Asshaik Hizbullah - 00966 53 776 1607

குறிப்பு : கேள்விக்கான விடையை வலைத்தளத்தில் கேள்வி இடப்பட்ட நேரத்தில்லிருந்து 48 மணித்தியாலங்களுக்குள் அனுப்பபடல் வேண்டும்.

சவூதி அரேபியா நேரம் : ஆரம்பம் 2018/02/24 11:30 am முடிவு 2018/02/26 11:30 am
இலங்கை நேரம் : ஆரம்பம் 2018/02/24 2:00 pm  முடிவு 2018/02/26 2:00 pm



ஹுஃதைபா பின் யமானி (றழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்; இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானோ தீயவை என்னைத் தீண்டிவிடுமோ என அஞ்சிய காரணத்தினால், நபியவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். (புகாரி, முஸ்லிம்)

நன்மைகளை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நலவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஆசைவைக்கிறோம். அதே போன்று, தீங்குகளில் விழுந்துவிடாதிருக்க தீமைகளைப் பற்றி நாம் அறிந்துவைப்பதும் அவசியமாகும். அந்த வகையில்; ""லா இலாஹ இல்லல்லாஹ்'" என்ற ஷஹாதாக் கலிமாவுக்கு, அல்லாஹ்வும், அவனது தூதர்களும் ஒரு பொருள் கொடுத்திருக்கும் போது, வேறு சிலர், பொறுத்தமில்லாத பொருளைக் கொடுத்து மக்களை திசைதிருப்பி, அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்றனர். எனவேதான், இக்கலிமாவின் உண்மையான பொருளையும் அதற்குரிய ஆதாரங்களையும் கூறுவதோடு, வழி கெட்ட, அல்லது, வழி தவறிய சிந்தனையுடையவர்கள் இதற்கு வேறுபட்ட பல அர்த்தங்களையும் தருவதால், அப்பொருள்கள், அதற்குரிய பதில்கள், மற்றும் தவறான பொருள்களால் ஏற்படும் விபரீதம் யாது என்பவைகளையும் அறிவதே இந்நூலின் நோக்கமாகும்.

""லா இலாஹ இல்லல்லாஹ்'" வின் சரியான பொருள்: உண்மையாக வணக்கத்துக்குரிய (வணக்கத்திற்கு தகுதியான) இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

"லா இலாஹ இல்லல்லாஹ்" என்பது இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது.

1. லா இலாஹ - நிராகரித்தல் (வணக்கத்திற்குரிய கடவுள் எதுவுமில்லை என ஒட்டுமொத்தமாக நிராகரித்தல்)

2. இல்லல்லாஹ் - ஏற்றுக்கொள்ளல். (வணக்கத்திற்குரிய கடவுள் அல்லாஹ் மட்டுமே என ஏற்றுக்கொள்ளல்)

இந்த இரண்டு அம்சங்களைப் பற்றி போதிக்கவே அல்லாஹ்வின் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்.

அல்லாஹ், அவனது தூதர்களை அனுப்பியதன் நோக்கம் யாது?

அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் எதற்காக, எதனைப் போதிக்க அனுப்பப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் தெளிவாகவே அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:
وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், (1)அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; (2)ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். அல் குர்ஆன்: 16:36 

தூதர்கள் அனுப்பப்பட்ட நோக்கம், அல்லாஹ்வை மட்டும் வணங்கி, அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ளச் செய்வதற்காகவேயாகும்.
وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்காதிருக்கவே உனதிரட்சகன் கட்டளையிட்டிருக்கிறான். அல் குர்ஆன் 17:23

அல்லாஹ் மனித இனத்தைப் படைத்த நோக்கம் யாது?

அல்லாஹ் கூறுகிறான்:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
“ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை.” (51:56)

அல்லாஹ் மனிதர்களைப் படைத்த நோக்கம், அவ்விறைவனை வணங்குவதற்கும், நபிமார்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம் மனிதர்கள் அல்லாஹ்வையன்றி வேறு எதனையும் வணங்கக்கூடாது என்றும் போதிக்கவுமே என்பதனை மேலுள்ள வசனங்களிலிருந்து அறிந்துகொள்வதோடு, ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' என்பதன் சரியான பொருள் உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை'' என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

இக்கலிமாவின் பொருளாக மேற்கூறப்பட்டது, எங்கள் சிறுவயது முதல் சொல்லித்தரப்பட்டவைதான். ஆனாலும், அதிக முஸ்லிம்கள், இக்கலிமாவுக்கு சரியான பொருள் தராது, அப்பொருளுக்கு ஏற்ப செயற்படாது, ஷைத்தனிய வழியில் செல்பவர்களாக இருக்கிறார்கள்.

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டியவர்கள், இன்று அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணமே இந்த ஷஹாதாக் கலிமாவை சரிவர அறியாமையும், அதற்குரிய பொருளை தராததுமேயாகும்.

தெளிவாக கடவுள் இல்லையெனக் கூறுபவர்களாகிய நாஸ்திகர்களுக்கும் இணைவைக்கும் முஸ்லிம்களுக்குமுள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.

நாஸ்திகர்களுக்கும் ஏகத்துவத்தை மறுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள வேறுபாடு:

· நாஸ்திகர்கள், (எதுவும் கடவுள் இல்லை என, ஒட்டு மொத்தமாக, வணங்கப்படும் அனைத்தையும் நிரகரிப்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதாவது, ஷஹாதாக் கலிமாவின் முதல் பகுதி கூறுவது போன்று “ لا إله ” (நிராகரித்தல்) எதுவும் கடவுள் இல்லையென தெளிவாக இருக்கின்றனர். ஆனால், அதன் இரண்டாவது பகுதியான “ إلا الله ” (அல்லாஹ் ஒருவன் தான் கடவுள்) என்பதை ஏற்க மறுக்கின்றனர்.

· இணைவைப்பில் ஈடுபடும் முஸ்லிம்களோ, “ إلا الله ” (ஏற்றுக்கொள்ளல்) வணக்கத்துகுரியவன் அல்லாஹ் என்பதை (பூரண விளக்கமின்றி) ஏற்றுக் கொண்டு, “لا إله” (நிராகரித்தல்) மனிதர்களால் தெய்வங்கள் என்று வணங்கப்படுபவைகளை பரிபூரணமாக நிராகரிக்காதிருக்கின்றனர்.

· நாஸ்திகர்கள் எதுவும் கடவுளில்லை எனக்கூற, முஸ்லிம்களோ, விளக்கமின்றி அல்லாஹ் அல்லாதவர்களையும் வழிபடுகின்றனர்.

எழுதியவர் : Abul Hasan (Sahwi,Madeni)


சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி… 
வாராந்த வினா விடை போட்டி
     சவூதி அரேபிய ரியாத் மாநகரில் அமையபெற்றுள்ள சர்வதேச பல்கலைகழகமான அல் - இமாம் முஹம்மத் பின் சுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் தமது உத்தியோக பூர்வ இணையத்தளம் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்தி வருகின்றனர். அதன் தொடராக சென்ற (2017) ரமலான் மாதத்தில் தமிழ் பேசும் உலகில் ரவ்லது ரமலான் என்ற தொனிப்பொருளில் தபால் மூலம் போட்டி நிகழ்ச்சி ஒன்றை சிறப்பாக நடாத்தியிருந்தது. அந்தவகையில் மேலும் தொடராக வாராந்த  வினா விடை போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.
போட்டி விபரம் :
      இப்போட்டியானது அல் - இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் இயக்கப்படும் www.alimamslsf.com என்ற இணையதளத்தில் நாளாந்தம் பதியப்படும் கட்டுரைகள், பயான்களில் இருந்து வாராந்தம்  கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடைகளை அனுப்பும் போட்டியாளர்களில் இருந்து  இருவர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுவர் .
பங்கு பற்றும் முறை :
     இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்புவோர் எமது இணையதளம் மூலம் வார ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பதியப்படும்  தகவல்களை படித்து அதில் கேட்கப்படும்  வினாவுக்கான விடையை 2 நாட்களுக்குள் WhatsApp அல்லது SMS ( குறுந்தகவல் ) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

பரிசு விபரம் :
    வெற்றி பெரும் அதிஷ்டசாலிகள் இலங்கையர்கள் எனில் அவர்கள் இருவருக்கும் தலா 200/- பெருமதியான reload பரிசாக வழங்கப்படும்.
    சவூதி அரேபியாவை சேர்த்தவர்கள் எனில் 10/- பெறுமதியான phone card இருவருக்கு பரிசாக வழங்கப்படும்.

மேலதிக தகவல்களுக்கு :
    இணையத்தில் பதியப்படும் வினாக்களுக்கான இணைப்புகளை Facebook, twitter மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

  
Twitter இல் நமது இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள... (Follow alimamslsf) என டைப் செய்து 40404 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.

  WhatsApp இல் இணையதள செய்திகள், மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள கீழ் வரும் இலக்கங்களில் ஏதாவது ஒன்றை தொடர்புகொள்ளுங்கள்.

Asshaik Waseem - 0094 75 25 238 25
Asshaik Hizbullah - 00966 53 776 1607

போட்டி விதிமுறைகள் :
01. 15 வயதை பூர்த்தி செய்த ஆண், பெண் என இரு பாலாரும் பங்குபற்றலாம்.
02.ஒருவர் ஒரு தடவை மாத்திரம் விடையை அனுப்ப வேண்டும்.
03.அனுப்புவரின் பெயர், விலாசம், தொடர்பிலக்கம் என்பன சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
04.விடை www.alimamslsf.com என்ற இணையத்தில் பதியப்படும் தகவல்களிலிருந்து மாத்திரமே எழுதப்படல் வேண்டும்.
05.விடையை SMS (குறுந்தகவல்) அல்லது WhatsApp மூலம் 48 மணித்தியாலத்துக்குள் மேற்குறிப்பிட்ட இரு தொலைபேசிகளில் ஏதாவது ஒரு தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
06.பல போட்டியாளர்கள் சரியான விடைகளை அனுப்பி இருப்பின் வெற்றியாளர்கள்   துண்டுகுலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படுவர். போட்டி மத்தியஸ்தர்களின் முடிவே இறுதியானதாகும்.
07.தெரிவு செய்யப்படும் இரு வெற்றியாளர்களினதும் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

போட்டி ஆரம்பம் :
·      2018/02/17 (சனி) -2018/02/23 (வெள்ளி) ஆகிய நாட்களில் பிரசுரிக்கப்படும் தகவல்களிலிருந்து 2018/02/24 (சனி) கேள்வி கேட்கப்படும், கேள்விக்கான சரியான விடையை 48 மணித்தியாலத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

       விடைகள் அனுப்பும் முறை
·           பெயர் :
·           விலாசம் : ( வீட்டிலக்கம், ஊர் , மாவட்டம் )
·           தொலை பேசி இலக்கம் :
·           விடை :

-    போட்டி ஏற்பாட்டுக்குழு -

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget